search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை போட்டியில் இடம் பெற்ற காந்தாரா
    X

    காந்தாரா

    ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை போட்டியில் இடம் பெற்ற காந்தாரா

    • ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா.
    • இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளியது.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.


    காந்தாரா

    இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இதை காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், காந்தாரா இரண்டு ஆஸ்கர் தகுதிகளைப் பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளது.



    Next Story
    ×