search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கோபப்படுத்திய தொகுப்பாளர்.. நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறிய சிரஞ்சீவி
    X

    சிரஞ்சீவி

    கோபப்படுத்திய தொகுப்பாளர்.. நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறிய சிரஞ்சீவி

    • கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜ் இருவரையும் சந்தித்து விக்ரம் வெற்றிக்காக சிரஞ்சீவி வாழ்த்து சொல்லியிருந்தார்.
    • சிரஞ்சீவியை இவ்வளவு மனம் வருத்தத்துடன் பார்த்ததில்லை என ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

    நடிகர் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த ஆச்சார்யா படம் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் சிரஞ்சீவி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். சிரஞ்சீவியும் தாங்கமுடியாத மன வருத்தத்தில் இருந்தார். அவரது நலன் விரும்பிகள் எல்லோரும் அவரை சில நாட்கள் சுற்றுலா சென்று வர வறுபுறுத்தியதால் சிரஞ்சீவியும் சென்று வந்தார்.

    ஆச்சார்யா


    சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தொகுப்பாளர் ஆச்சார்யா தோல்வி குறித்து ஏதோ சொல்ல நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார் சிரஞ்சீவி. அவரை இவ்வளவு மனவருத்தத்துடனும், கோபத்துடனும் இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததில்லை என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

    சல்மான் கான் - சிரஞ்சீவி - கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ்


    சிரஞ்சீவி, கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜ் இருவரையும் சந்தித்து விக்ரம் வெற்றிக்காக வாழ்த்து சொல்லியிருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின. விக்ரம் ரீமேக் உரிமைக்காக கமல்ஹாசனை சந்தித்துப் பேசியிருப்பதாகவும் சிலர் தகவல் பரப்பிவருகிறார்கள்.

    Next Story
    ×