search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    குழந்தை பற்றிய கேள்வி.. காட்டமாக பதிலளித்த ராம்சரண்
    X

    குழந்தை பற்றிய கேள்வி.. காட்டமாக பதிலளித்த ராம்சரண்

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண்.
    • ரசிகர்கள் எழுப்பிய கேளிவிக்கு நடிகர் ராம்சரண் காட்டமாக பதிலளித்துள்ளார்.

    தெலுங்கு ஹீரோ ராம் சரண் பற்றி காரசார விவாதம் தெலுங்கு சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் தனது 10வதுஆண்டு திருமண நாளை கொண்டாடினார். அப்போது சில ரசிகர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் ராம் சரண்-உபாசனா தம்பதிகள் திருமண்ம் செய்து கொண்டு 10 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது பற்றி கேள்வி எழுப்பி வந்தார்கள்.

    இதற்கு பதிலளித்த ராம் சரண் கூறியதாவது, நான் மெஹா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன், அவரின் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. மேலும் நான் சினிமாவிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் பயணிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதேபோல் எனது மனைவி உபாசனாவும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அடைய வேண்டிய உயரங்கள் இன்னும் இருக்கிறது. அதற்கிடையில் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி நாங்கள் யோசிக்கப்போதில்லை. மாறாக குழந்தைகள் பெற்றுக் கொள்ள எங்களுக்கு இன்னும் ஆண்டுகள் பல ஆகும். எங்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எதற்காக கேள்வி எழுப்புகிறீர்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார்.

    Next Story
    ×