search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெற்றி விழாவிற்கு என்னை அழைக்கவும்.. அசோக் செல்வனிடம் கோரிக்கை வைத்த ஹரிஷ் கல்யாண்
    X

    ஹரிஷ் கல்யாண்- அசோக் செல்வன்

    வெற்றி விழாவிற்கு என்னை அழைக்கவும்.. அசோக் செல்வனிடம் கோரிக்கை வைத்த ஹரிஷ் கல்யாண்

    • இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘போர் தொழி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'போர் தொழில்' திரைப்படம் இன்று (ஜூன் 9) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'போர் தொழில்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "போர் தொழில் திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வருகிறது. இது பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என்று நம்புகிறேன். வெற்றி விழாவிற்கு என்னை அழைக்கவும் அசோக் செல்வன்" என்று மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

    மேலும், ஹரிஷ் கல்யாணுக்கு நன்றி தெரிவித்து அசோக் செல்வன் பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×