என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
மீண்டும் இந்தி திரையுலகில் தனுஷ்
Byமாலை மலர்27 Jan 2022 10:40 AM GMT (Updated: 27 Jan 2022 10:40 AM GMT)
தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது இந்தி மொழி படங்களில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் வரிசையாக அவர் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
அதன் பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடித்துவருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தனுஷ்,
இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன் 2013-ல் வெளியான ராஞ்சன்னா என்ற படம் மூலம் தனுஷ் இந்தி திரையுலகிற்கு அறிமுகமானார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்து இருந்தார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். அதன்பின்னர் அமிதாப்பச்சனுடன் இணைந்து ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘அட்ரங்கி ரே’ படத்தின் மூலம் 3-வதாக மீண்டும் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்தார். இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
இந்நிலையில் மீண்டும் 2 புதிய இந்தி திரைப்படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஒரு படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி தயாரிக்கிறார். மற்றொரு படத்தை பிரபல இந்தி பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் ‘த கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X