search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சுதீப்
    X
    சுதீப்

    நடிகர் சுதீப்பின் பிறந்தநாளுக்கு எருமை மாட்டை பலி கொடுத்த விவகாரம் - 25 பேர் மீது வழக்குப்பதிவு

    பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நடிப்பதோடு நிறுத்தி விடாமல், இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவதனால் அவர் ரசிகர்கள் மனதில் அளவுக்கு அதிகமான அன்பை பெற்றுள்ளார். 

    இந்நிலையில், நடிகர் சுதீப் தனது 50-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி, பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி கட்அவுட் வைத்து பிரமாண்டமாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 

    சுதீப்

    அப்போது, சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதை பலியிட்டு, அதன் ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து, சுதீப் வாழ்க என கோஷமிட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, கன்னட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×