என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பாகுபலி பாணியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்
Byமாலை மலர்12 Aug 2021 2:11 AM GMT (Updated: 12 Aug 2021 2:11 AM GMT)
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்சேதுபதி, புதிய படத்தில் மன்னராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் அனபெல் சுப்பிரமணியம். இதில் டாப்சி ஹீரோயினாக நடித்துள்ளார். இருவருமே இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராதிகா, தேவதர்ஷினி, யோகிபாபு, சுப்பு பஞ்சு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். திகில் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஜெய்பூரில் நடத்தி முடித்துள்ளனர். படத்தில் சரித்திர காலத்தையும், இப்போதைய காலத்தையும் காட்சிப்படுத்தி இருப்பதாகவும், சரித்திர கால கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி மன்னராகவும், டாப்சி ராணியாகவும் நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
விஜய்சேதுபதி, டாப்சி
முழு படத்தையும் பார்த்த விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருக்கு கதை மிகவும் பிடித்துள்ளதாம். இதனால் படத்தின் பெயரை இன்னும் ரசிகர்களை கவரும் வகையில் மாற்ற யோசிக்கிறார்கள். அதோடு இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X