என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சர்ச்சை எதிரொலி - மன்னிப்பு கேட்ட இயக்குனர் செல்வராகவன்
Byமாலை மலர்9 March 2021 1:04 PM GMT (Updated: 9 March 2021 4:53 PM GMT)
தற்போது வெளியாகி இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயருக்கு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இயக்குனர் செல்வராகவன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலம் கழிச்சு வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துச்சிருக்காய்ங்க. இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி இருக்குது.
இந்நிலையில் இதுகுறித்த பேட்டியொன்றில் செல்வராகவனிடம் “படத்தில் கடவுள் மறுப்பாளராக காட்டப்பட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ராம்சே என பெயர் வைக்கப்பட்டது கடவுள் மறுப்பாளரான ராமசாமியை குறிக்கும் விதத்திலா?” என்று கேட்கப்பட்டபோது செல்வராகவன் ஆமாம் என்று பதில் அளித்திருந்தார். இந்த படத்தில் சைக்கோ பாத்திரமாக வரும் ஒருவருக்கு ஈ.வெ.ரா பெயரை வைத்து செல்வராகவன் இழிவுபடுத்துவதாக பலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள செல்வராகவன் “நண்பர்களே! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என்று கூறியிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X