search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரபல நாவலை படமாக்கும் மணிரத்னம்
    X

    பிரபல நாவலை படமாக்கும் மணிரத்னம்

    செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபல நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் இறங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Maniratnam
    ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை அடுத்து, பிரம்மாண்ட பொருட்செலவில் அடுத்த படத்தை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

    இந்த யோசனையில் ஒன்றாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு தள்ளிக்கொண்டேபோன ‘பொன்னியின் செல்வன்’ கதையும் ஒன்று என கூறப்படுகிறது. அதோடு இந்த கதையில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி மூவரையும் நடிக்க வைக்கலாம் என்கிற திட்டத்தில் அவர்களுக்கு கதையின் கருவை மணிரத்னம் அனுப்பியுள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

    அவரது பிரம்மாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பை 2019 தொடக்கத்தில் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார் மணிரத்னம். 


    Next Story
    ×