புதுச்சேரி

கோப்பு படம்.

புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

Published On 2023-11-14 05:20 GMT   |   Update On 2023-11-14 05:20 GMT
  • தமிழகம், புதுவையில் விடுமுறை அளிக்கப்பட்டது.
  • பணி நிமித்தமாக அவர்கள் ஊருக்கு சென்றனர்.

புதுச்சேரி:

தீபாவளி பண்டிகை மறுநாளான நேற்று  தமிழகம், புதுவையில் விடுமுறை அளிக்கப்பட்டது.

தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து வந்தவர்கள் தங்கள் பணி நிமித்தமாக அவர்கள் ஊருக்கு சென்றனர்.  இதனால் புதிய பஸ்நிலையத்தில் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. மழையை யும் பொருட்படுத்தாமல் பயணிகள் பஸ்களில் முண்டியடித்து ஏறினர். காலை 9 மணிக்கு மேல் கூட்டம் குறைய தொடங்கியது.

புதுவையிலிருந்து சென்னை செல்ல வேண்டிய ரெயில் மாலை 4 மணிக்கு இயக்கப்படும். இதுதவிர பொதுமக்கள் பஸ்சை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். இதனால் புதிய பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் ஏராளமாக இருந்தது.

பெங்களூரு, காரைக்கால், கோவை உட்பட பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் புதுவை புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News