உலகம்
துப்பாக்கிச்சூடு

தெற்கு கரோலினா - வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆசாமி கைது

Published On 2022-04-17 08:06 GMT   |   Update On 2022-04-17 08:06 GMT
அமெரிக்காவில் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொலம்பியா:

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், தெற்கு கரோலினாவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொலம்பியா போலீசார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News