செய்திகள்
ரோம் நகரில் மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி
இத்தாலி தலைநகர் ரோம் நகரை சென்றடைந்த மோடிக்கு விமான நிலையத்தில் மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று முதல் 31-ந்தேதி வரை 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு இத்தாலி தலைநகர் ரோம் நகரை சென்றடைந்த மோடிக்கு விமான நிலையத்தில் மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலியில் வாழும் இந்தியர்கள் அதிகளவில் திரண்டு வந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அங்கிருந்து புறப்பட்ட மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்வலஸ் மிக்கேல், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோரை கூட்டாக சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் பியாகா காந்தி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினர். வரவேற்பு அளித்த இந்தியர்களுடன் மோடி கலந்துரையாடினார்.