செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - 600 பேர் கைது

Published On 2021-08-02 23:06 GMT   |   Update On 2021-08-02 23:06 GMT
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஜெர்மனி 13-வது இடத்தில் உள்ளது.
பெர்லின்:

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதேபோல், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கும் கூடுதலான போராட்டக்காரர்கள் தெருக்களில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கலைந்து போகும்படி போலீசார் கூறினர். எனினும், இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், போராட்டம் நடத்தியவர்களில் 600 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News