செய்திகள்
கொரோனா வைரஸ்

அதிரும் பிரேசில் - ஒரே நாளில் 58,519 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-05-08 22:14 GMT   |   Update On 2021-05-08 22:14 GMT
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.21 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ:

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
   
இந்நிலையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 58,519 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.51 கோடியைத் தாண்டியுள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 1,923-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 4.21 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1.36 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 10.84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News