செய்திகள்
ரோஸ்மண்ட் பிரவுன்

கானா நாட்டில் நிர்வாண படம் வெளியிட்ட நடிகைக்கு ஜாமீன்

Published On 2021-04-22 19:00 GMT   |   Update On 2021-04-22 19:00 GMT
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டைச் சேர்ந்தவர் நடிகை ரோஸ்மண்ட் பிரவுன். இவர் கடந்த ஜூலை மாதம் தனது மகனின் 7-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அக்ரா:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டைச் சேர்ந்தவர் நடிகை ரோஸ்மண்ட் பிரவுன். இவர் கடந்த ஜூலை மாதம் தனது மகனின் 7-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் ஆடைகள் ஏதுமின்றி மண்டியிட்டு, தன் மகனின் கைகளைப் பிடித்து கொண்டு படம் பிடித்து, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியானா கேன், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து கடந்த வாரம் தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பை கேட்டு நடிகை கண்ணீர் சிந்தினார். அவரது சிறைத்தண்டனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் அங்கு விமர்சனங்கள் வெளியாகின.

இந்த நிலையில் அவர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அவர் முதல் முறை குற்றவாளி என்ற காரணத்தாலும், அவரது மகனின் நலனைக்கருத்தில் கொண்டும் ரூ.10 லட்சம் ரொக்க ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News