செய்திகள்
கொரோனா வைரஸ்

ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா - பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது

Published On 2020-12-28 22:26 GMT   |   Update On 2020-12-28 22:26 GMT
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பியூனோஸ் ஐர்ஸ்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.94 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News