செய்திகள்
ஓமனில் ஒரே நாளில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 290 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஸ்கட்:
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 290 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 231 பேர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தற்போது ஓமன் நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 357 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 1,218 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 73 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 290 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 231 பேர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தற்போது ஓமன் நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 357 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 1,218 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 73 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.