செய்திகள்
அமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில்
வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 லட்சத்து 9 ஆயிரத்து 319 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 777 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 66 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - 30,40,006
பிரேசில் - 16,26,071
இந்தியா - 6,97,413
ரஷியா - 6,87,862
பெரு - 3,05,703
ஸ்பெயின் - 2,98,869
சிலி - 2,98,557
இங்கிலாந்து - 2,85,768
மெக்சிகோ - 2,56,848
ஈரான் - 2,43,051
இத்தாலி - 2,41,819
பாகிஸ்தான் - 2,31,818
சவுதி அரேபியா - 2,13,716
துருக்கி - 2,06,844
தென் ஆப்பிரிக்கா - 2,05,721