செய்திகள்
சுதர்சனம் பாபு

அமெரிக்காவில் தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக இந்தியர் நியமனம்

Published On 2020-04-22 06:11 GMT   |   Update On 2020-04-22 06:11 GMT
அமெரிக்காவில் தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுதர்சனம் பாபு என்பவரை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுதர்சனம் பாபு என்பவரை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் நீடிப்பார். சுதர்சனம் பாபு, கடந்த 1986-ம் ஆண்டு தமிழகத்தின் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பும், 1988-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை தொழில்நுட்பம் (தொழிற்சாலை உலோக பிரிவியல், வெல்டிங்) பிரிவிலும் படித்து பட்டம் பெற்றார். 



அதன்பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றார். சுதர்சனம் பாபு, அமெரிக்க தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் 3-வது இந்தியர் ஆவார். இதற்கு முன் அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய 2 பேரும் உறுப்பினர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
Tags:    

Similar News