செய்திகள்
கொரோனா வைரஸ்

பாகிஸ்தானில் புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 56 ஆனது

Published On 2020-04-08 04:34 GMT   |   Update On 2020-04-08 04:34 GMT
பாகிஸ்தானில் புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில், புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது.

மேலும் 4 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 429 பேர் குணமடைந்துள்ளனர்.

வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிவாரண தொகுப்பை பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News