செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தாக்குதல் - இங்கிலாந்தில் ஒரே நாளில் 563 பேர் பலி

Published On 2020-04-01 14:38 GMT   |   Update On 2020-04-01 16:27 GMT
இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இங்கிலாந்தில் ஒரே நாளில் 563 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. 

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்  எண்ணிக்கை இதுவரை 8 லட்சத்து 80  ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 563 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 2352 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News