செய்திகள்
கோப்பு படம்

இத்தாலியில் கொரோனா வைரசுக்கு 17 பேர் பலி

Published On 2020-02-27 23:12 GMT   |   Update On 2020-02-27 23:12 GMT
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
ரோம்:

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதிலும் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 30-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 650 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News