செய்திகள்
ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 பயங்கரவாதிகள் பலி

Published On 2020-02-03 12:18 GMT   |   Update On 2020-02-03 12:18 GMT
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

ராணுவத்தினரின் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகளும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதற்கிடையில் தலிபான் பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள பேஹ்-இ-ஷிர்கட் மற்றும் ஷின்வாரி ஆகிய இரண்டு பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். 

இந்த தேடுதல் வேட்டையில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்கள் பதுக்கிவைத்திருந்த கண்ணிவெடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் ராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News