செய்திகள்
போரிஸ் ஜான்சன்- மோடி

பிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து

Published On 2019-12-13 06:24 GMT   |   Update On 2019-12-13 06:24 GMT
பிரிட்டனில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பிரிட்டனில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததால், அக்கட்சியின் தலைவர் ஜெரமி கார்பின் ராஜினாமா செய்துள்ளார். 

இந்நிலையில், பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-பிரிட்டன் இடையிலான நெருக்கமான உறவுகளுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News