செய்திகள்
காங்கோ நிலச்சரிவு

காங்கோவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலி

Published On 2019-11-27 12:25 GMT   |   Update On 2019-11-27 12:39 GMT
காங்கோ நாட்டில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
கின்ஷாசா:

காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் தலைநகர் கின்ஷாசாவின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சேதமான வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News