செய்திகள்
தலிபான் பயங்கரவாதிகள் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தான்: ராணுவ முகாம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் பலி

Published On 2019-11-20 17:05 GMT   |   Update On 2019-11-20 17:05 GMT
ஆப்கானிஸ்தானில் அரசுப்படைகளின் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. 

மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். 

பங்கரவாதிகள் ராணுவம் மற்றும் பொது மக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். 

இவர்களை அழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு அரசுப்படைகளும் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனால் அரசுப்படைகளுக்கும் தலிபான் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் குண்டுஸ் மாகாணத்தின் ஹகிம் மாவட்டத்தில் அர்ஃபக்ஹெல் கிராமத்தில் உள்ள அரசுப்படைகளுக்கு சொந்தமான ராணுவ முகாமை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 13 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
Tags:    

Similar News