செய்திகள்
கோத்தபய ராஜபக்சோ

இலங்கை அதிபர் தேர்தல் கோத்தபய ராஜபக்சே போட்டியிட தடையில்லை

Published On 2019-10-05 06:54 GMT   |   Update On 2019-10-05 10:32 GMT
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என அந்நாட்டு கோர்ட் தெரிவித்துள்ளது.
கொழும்பு:

இலங்கை அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கோத்தபய ராஜபக்சே இலங்கை குடிமகன் அல்ல. அவர் 2003-ம் ஆண்டில் அமெரிக்க குடிமகன் ஆகி விட்டார். இதன் மூலம் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.

இலங்கை அரசியல் அமைப்பின் 19-வது சட்டப் பிரிவின் கீழ் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதற்கு கோத்தபய ராஜபக்சே சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து விட்டார். எனவே தற்போது அவர் இலங்கை குடிமகன் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கோத்தபய மீது எதிர் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். இதன் மூலம் அவர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என அறிவிக்கப்பட்டது. 
Tags:    

Similar News