செய்திகள்
பூட்டானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - இரு விமானிகள் பலி
பூட்டான் நாட்டில் இன்று இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்திய ராணுவத்தின் விமானி மற்றும் பூட்டான் நாட்டை சேர்ந்த பயிற்சி விமானி ஆகியோர் உயிரிழந்தனர்.
திம்பு:
இந்திய ராணுவத்தை சேர்ந்த சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் பூட்டான் நாட்டு எல்லைக்குள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
பயிற்சி முடிந்து தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலைகள் சூழ்ந்த கென்ட்டோங்மானி பகுதியில் விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவருமே உயிரிழந்தனர்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் பூட்டான் நாட்டு எல்லைக்குள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
லெப்டினன்ட் கர்னல் பதவியுடன் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மூத்த விமானி பூட்டான் நாட்டை சேர்ந்த பயிற்சி விமானிக்கு டிராஷ்ங்காங் மாவட்டத்துக்கு உட்பட்ட வான்வெளியில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.
பயிற்சி முடிந்து தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலைகள் சூழ்ந்த கென்ட்டோங்மானி பகுதியில் விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவருமே உயிரிழந்தனர்.