செய்திகள்
குளத்தில் மூழ்கி பலியான சுமேத் மன்னார்

அமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி

Published On 2019-08-21 12:46 GMT   |   Update On 2019-08-21 12:46 GMT
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள குளத்தில் குதித்த இந்திய மாணவர் அதில் மூழ்கி பலியானார்.
வாஷிங்டன்:

இந்தியாவைச் சேர்ந்தவர் சுமேத் மன்னார் (27) , இவர் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள ஒரேகான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். இவர் அருகிலுள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான  க்ரேடர் லேக் தேசிய பூங்காவிற்கு  நேற்று மாலை சென்றுள்ளார்.

அப்போது, அங்குள்ள க்ரேடர் குளத்தில் 25 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். ஆனால் அவர் திரும்ப மேலே வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். உடனே பூங்காவில் உள்ள மீட்புப் படையினர்  மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் மீட்புப்படகில் சென்று அவரை தேடினர். மாலை முதல் இரவு வரை தேடியும் மன்னாரை கண்டுபிடிக்க இயலவில்லை.

மறுநாள் நீர்மூழ்கி வீரர்கள் குளத்தில் குதித்து தேடியபோது, 90 அடி கீழே உள்ள பாறைகளுக்கிடையே சிக்கியிருந்த அவரது உடலை மீட்டனர்.  இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News