என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "America"
- கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது
- கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.
இந்தவிபத்தில் 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் முன்னதாக தகவல் தெரிவித்ததால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.மேலும் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
அந்த கப்பலில் 4 ஆயிரத்து 679 கண்டெய்னர்கள் இருந்து உள்ளது. இலங்கையை நோக்கி அந்த கப்பல் சென்று கொண்டு இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த விபத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது :-
கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது குறித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கப்பல் பணியாளர்கள் முன்னரே எச்சரித்தனர். இதன் மூலம் பால்டிமோர் பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து அதிகாரிகளுக்கு கப்பலில் பணியாற்றிய இந்தியகுழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. எனவே கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு ஜோபைடன் கூறி உள்ளார்.
- இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின
- தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பெரிய பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோதியது. இதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின
தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம், பலி எண்ணிக்கை குறித்த முழு விவரம் இன்னும் தெரிய வில்லை. அங்கு மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் பெரிய பாலம் இடிந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
https://www.instagram.com/reel/C4-IEy-JoWP/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
- அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்
- டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்
அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு அவரின் 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. அப்போது மாசசூசெட்ஸ் Massachusetts மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் உயிர் பிழைத்தார்.
ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து வருடங்களுக்குள்ளாகவே மீண்டும் அவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. ஆகவே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையிலேயே அவருக்கு டயாலிஸஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் உதவியால் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனாலும் டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்.
அப்போது, மருத்துவர் டாட்சுவோ கவாய், தனது கடைசி முயற்சியாக நோயாளியான ரிக்ஸ்லாய்மென்னிடம், பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி பார்க்கலாம் என்று அனுமதி கேட்டுள்ளார்.
நோயாளியும் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருந்ததால், மருத்துவரின் ஆலோசனைக்கு ஒத்துக்கொண்டார். இதனால், மருத்துவர்கள் குழுவானது இவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய, மருத்துவர் டாட்சுவோ கவாய், "பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக இருக்கும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக அது வேலை செய்ய ஆரம்பித்து, நோயாளியின் உடலிலிருந்து சிறுநீர் பிரிய ஆரம்பித்தது. இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறை வெற்றிபெற்றால், பல நோயாளிகள் பலனடைவார்கள். விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுதலால் உறுப்பு பற்றாக்குறை குறையும்" என்றும் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிக் ஸ்லாய்மெனின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இவர் வீட்டிற்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.
- பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
- அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார். பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.
பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
- செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.
- நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்காவில் (Fort Worth Zoo) கர்ப்பமாக இருந்த செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.
பிரீக்ளம்ப்சியா என்பது கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் தீவிர ரத்த அழுத்த நிலையால் செகானி என்ற கொரில்லா பாதிக்கப்பட்டிருந்தால் தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் இந்த 'குட்டி' கொரில்லா பிறந்தது.
நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர். தற்போது செகானி மற்றும் ஜமீலா ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.
- "மெக்சிகோவின் ஜனாதிபதி" என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.
- மக்களிடம் பரப்ப முயற்சித்து வருகிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்தார். 'காசாவின் மனிதாபிமான நிலைமை பற்றி அவரிடம் நிருபர்கள் ஒரு கேள்வியை முன் வைத்தனர்.
அப்போது ஜோ பைடன் 'மனிதாபிமானப் பொருட்களுக்கான நுழைவாயிலைத் திறக்க மெக்சிகோவின் ஜனாதிபதி எல்.சி.சி.-யுடன் பேசினேன். நான் அவரை வாயிலைத் திறக்கச் சொன்னேன்," என்று கூறினார்.
எகிப்திய தலைவர் அப்துல் பைத்தாக் எல்.சி.சி.-யை தவறுதலாக "மெக்சிகோவின் ஜனாதிபதி" என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். இது சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது.
அமெரிக்க குடியரசுக் கட்சியினர் ஜோ பைடன் மறதி காரணமாக அடிக்கடி நினைவு இழக்கிறார் என்பதற்கான சமீபத்திய ஆதாரமாக அந்த வைரல் வீடியோவை மேற்கோள் காட்டி மக்களிடம் பரப்ப முயற்சித்து வருகிறார்கள்.
86-வயதாகும் ஜோ பைடன் உலக தலைவர்களின் பெயர்கள் குறித்து தற்போது 3-வது முறையாக தவறுதலாக உளறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது.
- உக்ரைனின் படைகள் களத்தில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட கணிசமான ஆதாயங்களைப் பெற போராடி வருகின்றன.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ரஷியா ஏவுகணைகளால் தாக்கி அழித்து வருகிறது. உலக நாடுகள் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது. அமெரிக்கா ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனிற்கு பல பில்லியன் டாலர்களை இராணுவ உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில், சுரங்கங்கள் மற்றும் தடைகளை அகற்றுவதற்கான உபகரணங்களை உள்ளடக்கிய புதிய 250 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனின் படைகள் களத்தில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட கணிசமான ஆதாயங்களைப் பெற போராடி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா உதவி வருகிறது. வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள், கவச எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான சிறிய ஆயுத வெடிமருந்துகளும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த உதவியானது, "போர்க்களத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளவும், அதன் மக்களைப் பாதுகாக்கவும் உக்ரைன் உதவும்" என்று பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின் கால்கள் அருகே அமர்ந்து கொண்டார்
- மார்க்கின் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
அமெரிக்கவில், மார்க் ஆன்டனி கோன்ஸாலஸ் (26) என்பவர் ஒரு புது வகையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ளது ஸ்டேட்லைன் ரிசார்ட் எனும் குடியிருப்பு பகுதி. இங்கு ஜூலை 1-லிருந்து 3-ம்தேதி வரை அதிகாலை நேரங்களில் பூட்டப்படாத 2 தனித்தனி குடியிருப்புகளுக்குள் மார்க் புகுந்திருக்கிறார்.
அந்த வெவ்வேறு வீடுகளிலும் ஒரே குற்றத்தை புரிந்திருக்கிறார்.
முதலில் அவர் பூட்டப்படாத ஒரு வீட்டின் உள்ளே சென்றார். அங்கு உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின் கால்கள் அருகே அமர்ந்து கொண்டார். பிறகு அந்த பெண்ணின் உள்ளங்கால்களை நீண்ட நேரம் தடவினார். கால்களை ஏதோ உரசுவது போன்ற உணர்வில் அப்பெண் உறக்கம் கலைந்து எழுந்தார். கட்டிலுக்கருகே ஒருவன் அமர்ந்திருப்பதை கண்ட அப்பெண் திடுக்கிட்டு கூக்குரலிட்டார். உடனே மார்க் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதேபோன்று அதே குடியிருப்பு பகுதியில் உள்ள மற்றொரு பெண் வீட்டிலும் நுழைந்து மார்க், இவ்வாறு நடந்து கொண்டார்.
மார்க் பல குற்றங்களுக்காக கலிபோர்னியா காவல்துறையால் முன்பே அறியப்பட்டவர். அவர் மீது பெண்கள் காலணி திருட்டு, அத்துமீறி உள்ளே நுழைதல், மற்றும் அத்துமீறி நுழையும் இடங்களில் பாலியல் ஆசைகளை முறையற்ற வழியில் தீர்க்க முற்படுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
அவரின் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் 1-ந்தேதி, அத்துமீறி உள்ளே நுழைதல் மற்றும் அத்துமீறி பிறரை தீண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக மார்க் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மெர்செட் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் நிவேடா மாநில டக்ளஸ் கவுன்டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார். "இதுபோன்ற குற்றங்கள் சமூகத்திற்கு ஆபத்தானவை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால்தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்," என இச்சம்பவம் குறித்து டக்ளஸ் கவுன்டி ஷெரீப் டான் கவர்லி கூறினார்.
- சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார்
- வருவாயை பெருக்க எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது
அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் "எக்ஸ்" என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார்.
முகநூல் நிறுவனத்தினரின் "திரெட்ஸ்" எனும் புதிய சமூக வலைதளமும் X-க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமீப காலங்களில் எக்ஸின் வருவாய் குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. கடன் சுமையினாலும், 50% விளம்பர வருவாய் குறைந்திருப்பதனாலும், அதன் வருவாய் மிகவும் பின்னடைந்திருப்பதாக மஸ்க் இம்மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
விலைக்கு வாங்கியதிலிருந்தே தனது நிறுவனத்தை மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மஸ்க், பல பணியாளர்களை நீக்கினார். விளம்பர துறையில் வல்லுனரான லிண்டா எக்கேரினோ என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.
சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார். மேலும், "இது தற்காலிகமான லோகோதான். இதுவும் விரைவில் மாற்றப்படலாம்" எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், X-ன் மாதாந்திர பயனர் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 5.4 கோடி (540 மில்லியன்) என உறுதிப்படுத்தும் விதமாக சில புள்ளி விவரங்களையும், விளக்கப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். வருவாயை பெருக்க மஸ்க் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது.
மே 2022-ல் டுவிட்டருக்கு சுமார் 2.3 கோடி (229 மில்லியன்) பயனாளிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- 5 கன்டெய்னர்கள் மூலம் நீரா பானம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்து 200 விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்து மக்களிடம் அவற்றை கொண்டு சேர்க்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்கப்பட்டு வரும் நீரா மின்னணு வர்த்தக முறையிலும் சமீபத்தில் விற்பனையைத் துவக்கியது. சமீபத்தில்5 கன்டெய்னர்கள் மூலம் நீரா பானம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:- நீரா பானத்தை சர்வதேச அளவில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். இதற்காகஅமெரிக்காவில் உள்ள டெனிசி மாகாணம் நாஸ்வில் பகுதியில் நீரா விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளது. ரீஜென்ட் நார்த் அமெரிக்கா என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இம்மையத்துக்கு கோவை மாவட்டம் அன்னூரை பூர்வீகமாக கொண்ட கதிர் குருசாமி வினியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். விற்பனை மைய துவக்க விழாவில் அட்லாண்டா மாநிலத்தின் இந்திய தூதர் சுவாதி நீரா வை அறிமுகப்படுத்த செனட் தலைவர் ஜேக் ஜான்சன் பெற்றுக் கொண்டார். உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் பங்கேற்றார்.அமெரிக்க சந்தையின் ஈர்ப்பைப் பொறுத்து மாதம் 2 லட்சம் டெட்ரா பேக்குகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 6-ஆம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது.
- இதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. கடந்த 6-ஆம் தேதி மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
ஐஸ்வர்யா
இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஐஸ்வர்யா உயிரிழந்தார். இவர் ஐதராபாத் உள்ள சரூர் நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஆவார். ஐஸ்வர்யாவின் மரணம் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்த ஐஸ்வர்யா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஆவார். இந்த நிலையில் தன்னுடைய ரசிகைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூர்யா சென்னையில் உள்ள தனது வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ரசிகையின் குடும்பத்திற்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
- வரும் மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவது தொடர்பான செலவினங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரக கட்டணங்களுக்கான செலவு அட்டவணையை திருத்தி உள்ளது.
அமெரிக்காவிற்கான மாணவர் விசாக்கள் இப்போது கூடுதலாக 25 டாலர் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா செயலாக்கக் கட்டணங்களின் அதிகரிப்பின் படி, வணிகம் அல்லது சுற்றுலா (பி1/பி2எஸ் மற்றும் பிசிசிகள்) வருகைக்கான விசாக்களின் செலவு, அத்துடன் மாணவர் போன்ற பிற மனு-அடிப்படையிலான என்IVகள் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விசாக்கள், 160 டாலரில் இருந்து 185 டாலராக ஆக அதிகரிக்கவுள்ளது.
தற்காலிக பணியாளர்களுக்கான (எச், எல், ஒ, பி, கியூ மற்றும் ஆர்பிரிவுகள்) குறிப்பிட்ட மனு அடிப்படையிலான குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கான கட்டணம் 190 டாலரில் இருந்து 205 டாலராக ஆக உயரும் என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.
ஒப்பந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒரு சிறப்புத் தொழிலுக்கான (இ வகை) பயணிகள் 205 டாலரிருந்து 315 டாலராக அதிகரித்த செலவைச் செலுத்த வேண்டும். மேலும், இந்த ஆண்டு 1 மில்லியன் விசாக்களை வழங்க வெளியுறவுத்துறை விரும்புவதாக விசா சேவைகளுக்கான துணை உதவி செயலாளரான ஜூலி ஸ்டப்ட்டின் கூறியுள்ளார். இது வரும் மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்