செய்திகள்
பாகிஸ்தானில் கனமழைக்கு 28 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் சில மாகாணங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் கைபர்துங்கவா மாகாணம், கராச்சி, லாகூர் உள்ளிட்டபகுதிகளில் வழக்கத்தைவிட மிக அதிகமான மழை பெய்து வருகிறது.
கடந்த மாதம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குட்பட்ட நீலம் சமவெளி பகுதியில் பெய்த பெருமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 28 பேர் பலியானது நினைவிருக்கலாம்.