செய்திகள்
வங்காளதேசம்: சாலை விபத்தில் 7 பேர் பலி
வங்காளதேசத்தில் தாகுர்கான் - தாக்கா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும் சிற்றுந்தும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியாகினர்.
தாக்கா:
ஜகனாத்பூர் நகரத்தின் அருகே பயணிகளோடு தாகாவிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது எதிரே வந்த சிற்றுந்து (Mini Bus) நேராக மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.