செய்திகள்
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயம் சேகரிக்கும் போலீஸ்

ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு - இருவர் காயம்

Published On 2019-08-02 05:00 GMT   |   Update On 2019-08-02 05:00 GMT
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பாங்காங்:

தாய்லாந்து நாட்டில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தன. இதில்  2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



அமைச்சர்கள் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் கூறினர்.
Tags:    

Similar News