செய்திகள்
மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள்.

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

Published On 2019-07-24 12:32 GMT   |   Update On 2019-07-24 12:32 GMT
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் 34 பேர் காணவில்லை என்றும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பீஜிங்:

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இந்த கிராமத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு 11 பேரை உயிருடன் மீட்டனர்.

ஆனாலும், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News