செய்திகள்
நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி
நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
கனோ:
நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகளுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.
இந்நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள கொண்டுகா பகுதியில் கால்பந்து ரசிகர்கள் சிலர் ஒன்றுகூடி போட்டியை தொலைக்காட்சியில் நேற்று பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் 4 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள் என்றும் ஒருவர் ஆண் எனவும் கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு போகோஹராம் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இதில் 1 பெண் பயங்கரவாதி கொண்டுவந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகளுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.
இந்நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள கொண்டுகா பகுதியில் கால்பந்து ரசிகர்கள் சிலர் ஒன்றுகூடி போட்டியை தொலைக்காட்சியில் நேற்று பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் 4 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள் என்றும் ஒருவர் ஆண் எனவும் கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு போகோஹராம் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இதில் 1 பெண் பயங்கரவாதி கொண்டுவந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.