செய்திகள்

பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

Published On 2019-02-18 11:19 GMT   |   Update On 2019-02-18 11:19 GMT
பலுகிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.
இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பதற்கு இணங்க இச்சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டல பகுதியில் பலுகிஸ்தான் உள்ளது. அங்கு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ‘பலோச் ராஜி அஜோல் சங்கள்’ என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

எனவே அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ரோந்து படையின் மீது பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

அதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். பலுகிஸ்தான் பயங்கரவாத இயக்கம் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
Tags:    

Similar News