செய்திகள்

பாகிஸ்தானில் 3 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2019-02-06 02:32 GMT   |   Update On 2019-02-06 02:32 GMT
கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இஸ்லாமாபாத் :

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் மலைப்பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது ராணுவ வீரர்களை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Tags:    

Similar News