செய்திகள்

தாய்லாந்தில் 2 புத்த பிட்சுகள் சுட்டுக்கொலை

Published On 2019-01-20 10:01 GMT   |   Update On 2019-01-20 10:01 GMT
தாய்லாந்தில் 2 புத்த பிட்சுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாங்காங்க்:

தாய்லாந்தில் மலேசிய எல்லையில் நராதிவாட் மாகாணம் உள்ளது. அங்குள்ள ரத்தானுபாப் என்ற இடத்தில் உள்ள புத்தர் கோவிலுக்குள் கறுப்பு நிற உடை அணிந்த பலர் திடீரென புகுந்தனர்.

பின்னர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் புத்த பிட்சுகள் 2 பேர் அதே  இடத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களை சுட்டுக் கொன்றது யார் என தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News