செய்திகள்
கச்சத்தீவு அருகே 3 ஆயிரம் தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை அராஜகம்
இந்திய அரசால் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு அருகே 3 ஆயிரம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததுடன் 15 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் நாசப்படுத்தினர். #TNfishermen #TNfishermenchased #SriLankannavy
கொழும்பு:
தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கச்சத்தீவின் அருகேயுள்ள இந்திய கடல் எல்லையில் 514 படகுகளில் இருந்தவாறு இன்று காலை மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, இலங்கை கடற்படையை சேர்ந்த 15 ரோந்துப் படகுகள் அப்பகுதிக்கு விரைந்து வந்தன. அப்படகுகளில் இருந்த கடற்படையினர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை மிரட்டி, விரட்டியடித்தனர்.
மேலும் 15 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் நாசப்படுத்தியதாக ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் தெரிவித்தார். #TNfishermen #TNfishermenchased #SriLankannavy