செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Published On 2018-12-27 09:05 GMT   |   Update On 2018-12-27 09:05 GMT
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரியை காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். #Policeofficerdeath

நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான அவர் நியூமேன் பகுதியில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

ரோனில்சிங் பணியில் இருந்தபோது அதிவேகமாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார். அப்போது அதில் இருந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் ஆத்திரம் அடைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் அவருக்கு பல இடங்களில் குண்டுகள் பாய்ந்தன. அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரோனில்சிங் இறந்தார். #Policeofficerdeath

Tags:    

Similar News