செய்திகள்

ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம் - தமிழ் எம்.பி.க்கள் அறிவிப்பு

Published On 2018-11-03 08:34 GMT   |   Update On 2018-11-03 08:59 GMT
இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. #Rajapaksa #Sampanthan #TNA
கொழும்பு:

இலங்கை பாராளுமன்றத்தில் வருகிற 7-ந் தேதி யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற ராஜபக்சே எம்.பி.க்களுக்கு வலைவீசி குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் 15 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.



இது தொடர்பாக இன்று மதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, “பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது நடுநிலை வகித்தால் அது ஜனநாயக விரோத செயலாக மாறிவிடும். எனவே ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிப்போம்” என்று தெரிவித்துள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ராஜபக்சே தோல்வியடைய வாய்ப்பு உள்ளது. #Rajapaksa #Sampanthan #TNA

Tags:    

Similar News