செய்திகள்
ஆப்கானிஸ்தான் அரசு அலுவலகம் மீது பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் - 10 போலீசார் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு அலுவலகத்திற்கு தாலிபான் பயங்கரவாதிகள் தீ வைத்ததில் 10 போலீசார் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். #Taliban
காபூல் :
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வர்டாக் மாகாணத்தில் உள்ள சயீத் அபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகதிற்கு தாலிபான் பயங்கரவாதிகள் தீ வைத்ததால் கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில், மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி உள்பட 10 போலீசார் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மேலும், தலைநகர் காபூலில் இருந்து தெற்கு மாகாணங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளையும் பயங்கரவாதிகள் துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாலைகளை பயங்கரவாதிகள் வசமிருந்து மீட்க்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Taliban
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வர்டாக் மாகாணத்தில் உள்ள சயீத் அபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகதிற்கு தாலிபான் பயங்கரவாதிகள் தீ வைத்ததால் கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில், மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி உள்பட 10 போலீசார் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மேலும், தலைநகர் காபூலில் இருந்து தெற்கு மாகாணங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளையும் பயங்கரவாதிகள் துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாலைகளை பயங்கரவாதிகள் வசமிருந்து மீட்க்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Taliban