செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு

Published On 2018-08-14 19:43 GMT   |   Update On 2018-08-14 19:43 GMT
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாகிஸ்தானில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. #IndependenceDay
இஸ்லாமாபாத் :

இந்தியாவின் 72-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. #IndependenceDay 
Tags:    

Similar News