செய்திகள்
கஞ்சா கடத்தியதாக 4 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக கச்சத்தீவு அருகே 4 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் இன்று கைது செய்தனர். #TNfishermenheld #LankanNavy #ganjasmuggling
கொழும்பு:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள கடலோர குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகை கச்சத்தீவு அருகே இன்று இலங்கை கடற்படையினர் இன்று வழிமறித்தனர்.
அவர்களை கண்டவுடன் படகில் இருந்தவர்கள் சில பொட்டலங்களை கடலில் தூக்கி வீசியதாகவும், அதை மீட்டு சோதனை நடத்தியபோது பொட்டலங்களுக்குள் 40 கிலோ கஞ்சா இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்ததாக தெரியவந்துள்ளது. #TNfishermenheld #LankanNavy #ganjasmuggling