புத்தகத்தில் சர்ச்சை கருத்து - உளவுத்துறை முன்னாள் தலைவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் உளவுத் துறையான ‘ஐ.எஸ்.ஐ’ அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்டினெட் ஜெனரல் ஆசாத் துரானி. இவர் 1990 முதல் 1992-ம் ஆண்டுவரை இப்பதவி வகித்தார்
கடந்த வாரம் ‘தி ஸ்பை கிரானிகல்ஸ்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. ஆசாத் துரானி இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வின் முன்னாள் தலைவருடன் இணைந்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் இணை ஆசிரியராக இருக்கிறார். அப்புத்தகத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் ஏற்படும் பிரச்சினைகளில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் மறைந்து இருந்த இடம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியும். பின்னர் அவர்கள் அமெரிக்காவிடம் அவரை ஒப்படைத்தனர் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், உளவுத் துறையின் கண்ணியத்தை பாழபடுத்துவதாகவும் ராணுவ தலைமையகத்தில் இருந்து துரானிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரது நடத்தை விதிமுறையில் இருந்து தவறியதாக குற்றம் சாட்டி அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதித்துள்ளது. #tamilnews