செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு

Published On 2018-04-25 19:38 GMT   |   Update On 2018-04-25 19:38 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காபூல்:
 
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் போலீஸ் சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடி அருகில் இரண்டு இடங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பொதுமக்களை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News