search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காபூல்"

    • ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பசி மற்றும் சுகாதார நெருக்கடி.
    • சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுகின்றன.

    தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால், அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று சில குடியிருப்பாளர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    வீடு இருந்த போதும் போதிய பணம் இல்லாததால், நாங்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்று பிச்சைகாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையான பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கான் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

    பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் ஜான் சிஃப்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • பரபரப்பு நிறைந்த தெரு ஒன்றில் குண்டு வெடித்தது.
    • வெடிகுண்டு தாக்குதல் குறித்து தாலிபான் அரசு விசாரணை

    ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பரபரப்பாக காணப்படும் வணிக நிறுவனங்கள் நிறைந்த தெருவில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர், 22 பேர் காயமடைந்தனர்.

    தனியார் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக தனது டெலிகிராம் சேனலில் சன்னி முஸ்லிம் போராளிக் குழு தெரிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களுக்கு உதவவும், உயிரிழப்புகளை மதிப்பிடவும் ஒரு விசாரணைக் குழு குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×