search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beggars"

    • மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறது.
    • பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முதல் கட்டமாக 30 முக்கிய நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஆன்மிக நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க நகரங்கள் மற்றும் சுற்றுலா சிறப்பு வாய்ந்த பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளன.

    நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை காரணமாக பல்வேறு வகைகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாலும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு முதல் கட்டமாக 30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறது.

    இந்த நகரங்களில் இன்னும் 2 ஆண்டுகளில் பிச்சைக்காரர்களுக்கு தனியாக மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஆன்மிக நகரங்களில் சம்பந்தப்பட்ட மத அறக்கட்டளைகள் மற்றும் ஆலய நிர்வாகம் மூலமும் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது வருகிறது.


    இதற்காக நாட்டின் வட பகுதியில் அயோத்தியில் இருந்து கிழக்கே கவுகாத்தி வரையிலும், மேற்கு பகுதியில் திரிம்பகேஸ்வர் முதல் தெற்கே திருவனந்தபுரம் வரையிலும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் முதியவர்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முதல் கட்டமாக 30 முக்கிய நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    இதன் முக்கிய நோக்கமே பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளாக மாற்றுவதாகும். இதற்காக மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு இது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு (ஸ்மைல்) என்ற துணை திட்டத்தின் கீழ் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பிச்சை இல்லாத இந்தியா என்ற இலக்கை நிறைவேற்ற இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்றும் மத்திய அரசு கணித்துள்ளது.

    இதற்காக மத்திய அமைச்சகம் ஒரு தேசிய போர்டல் மற்றும் மொபைல் செயலியை அடுத்த மாதம் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த செயலி மூலம் பிச்சை எடுப்பதாக அடையாளம் காணப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மறு வாழ்வு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வாய்ப்பாக அமையும் என்றும் கருதப்படுகிறது.


    முதல் கட்டமாக இந்த பட்டியலில் ஆன்மிக நகரங்களான அயோத்தி காங்கிரா, ஓம்காரேஸ்வர், உஜ்ஜயினி, சோம்நாத், பாவகர், திரிம்பகேஸ்வர், போத்கயா, குவா ஹாடியன், மதுரை ஆகிய நகரங்களும், சுற்றுலா பகுதிகளான விஜயவாடா, கேவாடியா, ஸ்ரீநகர், நம்சாய், குஷி நகர் போன்ற பகுதிகளும், வரலாற்று சிறப்புமிக்க நகரங்களான சாஞ்சி, கஜுராகோ, ஜெய்சல்மேர், திருவனந்தபுரம், அமிர்த சரஸ், புதுச்சேரி, உதய்ப்பூர், வாரங்கல், கட்டாக், இந்தூர், கோழிக்கோடு, மைசூரு, பஞ்ச் குலா, சிம்லா, தேஜ்பூர் ஆகிய பகுதிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சாஞ்சியில் பிச்சைக்காரர்கள் யாரும் இல்லை என்று அந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். எனவே இந்த பட்டியலில் சாஞ்சிக்கு பதிலாக மாற்று நகரத்தை தேர்வு செய்யவும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளை உருவாக்க வாய்ப்புகள் ஏற்படும் என்று மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    • பஸ் நிலையம் அதனைச் சுற்றியுள்ள ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது
    • வெயிலில் நீண்ட நேரம் குழந்தைகள் பிச்சை எடுப்பதால் அவர்களுக்கு நீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தமாகவும், வியாபாரநிமித்தமாகவும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் பஸ் நிலையம் அதனைச் சுற்றியுள்ள ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சில பெண்கள் கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் வாங்க காசு கொடுங்கள் என்று கேட்டு பிச்சை எடுக்கின்றனர்.

    பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பதால், பொதுமக்களும் பரிதாபப்பட்டு அதிக அளவில் உதவுகின்றனர். ஆனால், ஒரு கும்பல் பணத்துக்காக குழந்தைகளை பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது.மேலும் குழந்தைகள் பசிக்குது சாப்பிட காசு கொடுங்க என கெஞ்சும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.மேலும் வெயிலில் நீண்ட நேரம் குழந்தைகள் பிச்சை எடுப்பதால் அவர்களுக்கு நீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

    இந்த கும்பல்கள் உண்மையிலேயே அவருடைய குழந்தைகள் வைத்து தான் பிச்சை எடுக்கிறார்களா அல்லது குழந்தைகளை திருடி வந்து பிச்சை எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை.ஆகவே குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல்கள் மீது அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • பிச்சை எடுக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகர போக்கு வரத்து சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மேலமடை, ஆவின் சந்திப்பு, காளவாசல், பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் எண்ணற்ற குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதை பார்க்க முடிகிறது.

    இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிடம் கேள்வி எழுப்பியி ருந்தார். இதற்கு பதில் அளித்து அந்த நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 4, 2020-ல் 15, 2021-ல் 38, 2022-ல் 56பேர் உள்பட ஒட்டுமொத்தமாக 113 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். மதுரை மாநகரில் மட்டும் கடந்த 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை கடத்தி விற்க முயன்றதாக 4 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 19 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவரவர் பெற்றோர் வசம் ஒப்படைக் கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சிறப்பு குழுக்கள் அமைத்து பிச்சை எடுக்கும் குழந்தைளை மீட்க வேண்டும்.

    அவர்களை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பசி மற்றும் சுகாதார நெருக்கடி.
    • சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுகின்றன.

    தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால், அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று சில குடியிருப்பாளர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    வீடு இருந்த போதும் போதிய பணம் இல்லாததால், நாங்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்று பிச்சைகாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையான பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கான் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

    பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் ஜான் சிஃப்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ×