செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

Published On 2018-04-18 11:19 GMT   |   Update On 2018-04-18 12:37 GMT
இந்தோனேசியா நாட்டில் உள்ள சவும்லக்கி தீவில் இன்று 5.3 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐகார்தா:

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.

இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. கடந்த திங்கட் கிழமை அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள சவும்லக்கி தீவில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிந்துள்ளது.

நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  #tamilnews
Tags:    

Similar News