செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் விடுதலை

Published On 2018-04-06 12:31 GMT   |   Update On 2018-04-06 12:31 GMT
இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான 19 ராமேஷ்வரம் மீனவர்களை விடுவித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு:

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்து மீண்டும் 19 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். நல்லண்ண அடிப்படையில் 19 பேரையும் நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் 19 மீனவர்களும் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews
Tags:    

Similar News